உறவுகள் கூடியிருக்கும்
அத்தருணத்தில்
உணர்வற்றிருக்கும் என்மனம்
ஓராயிரம் கதை
உறவுகள் சொல்ல
ஒரு வரி கூட புரியாமல் நானிருக்க
திடீரென ஒரு கேள்வி கேட்க
விடை தெரிந்தும்
விழி பிதுங்க
என் முகம் வேர்க்க
உறவுகள் சொல்லும்
எவன் நினைவில்
நீ இருக்காய் என்று
யாருக்குச் சொல்ல
என் உணர்வுகள் இறந்தும்
நான் உயிர் வாழ்கிறேன் என்று……………
No comments:
Post a Comment