Social Icons

நானும் கவிதை எழுதுவேன்

 என் காதலனுக்கு 
கவி பாட 
எனக்குத் தெரிந்த புலவனிடம் சென்று 
தகுந்த சன்மானம் வழங்கி 
கவிதை கேட்டேன் 
உன்னவனை எனக்குத்தெரியாது 
சற்றுக்கூறென்றார் 
நானும் கூறி முடித்தேன் 
நான் கொடுத்த சன்மானத்தை 
திருப்பி வழங்கி 
என்னை மன்னித்து விடம்மா 
இதை விட 
என் கவித்துளிகள் 
என்ன கூறிவிடப் போகின்றன 
என்று சொல்லி 
என்னை கவிஞராக்கி விட்டார் 

2 comments:

  1. நானும் கவிதையை ரசிப்பேன்!!....வரைந்து வைத்து பூக்களில் வாசம் உண்டென சொல்லும் சிறுவண்டே நேசமும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பதாய் சொல்லிவிடு...நிஜமாகவே அழகான கவி..வரிகள்!!!

    ReplyDelete
  2. மனம் நிறைந்த அன்புகள் வடிவேல் மதுசன்

    ReplyDelete

Welcome Graphic #94