Social Icons

அழகான ராச்சசி


அன்று தான் 
கண்டேன் அவளை 
அழகின் அரசியவள் 
அகங்காரத்துடன் புண்ணகைத்தாள் 
ஊருக்கும் புதுசு 
வீட்டுக்கும் புதுசு 
என்பது தான் 
எனது கற்பனை 
அயல் வீட்டாரை மட்டுமல்ல 
ஆணவம் பிடித்தவர்களையும் 
ரசிக்கவைக்கும் 
இதழ்கள் கொண்டவள் 
அவளைத் தாண்டிச் செல்வோரை 
சிறைப்படுத்தி விடுவாள் 
இதனை அவள் 
காதலன் அறிந்தால் 
அடுத்த போர் 
ஆரம்பமாகிவிடுமோ என்னமோ 
அன்றொரு நாள்
அவள் வீட்டு வாசலை 
எட்டி எட்டி பார்த்தேன் 
அவளைக் காணவில்லை 
இறைவனின் பாதத்தில் 
பல பூக்களுக்கு தலைவியாய் 
பூத்திருந்தால் 
புது றோஜாப்பூவாக




No comments:

Post a Comment

Welcome Graphic #94